ஊதா நிறத்தில் ரோஜா பூ மேல் இருந்த பாம்பு.. வியப்பில் மூழ்கியா பார்வையாளர்கள்.. வைரல் வீடியோ!

உலகில் வாழும் பாம்புகளில் பல வகையானவை பார்த்திருப்போம் கேள்விப்பட்டிருப்போம், ஒவ்வொரு பாம்பு வகைகளும் தனித்தன்மை வாய்ந்தவை அந்த வகையில் ஊதா நிறத்தில் இருக்கும் பாம்பின் வீடியோ இணையத்தில் ஆயிரக்கணக்னோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், லைஃப் ஆன் எர்த் என்ற டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதன் அழகை வர்ணித்து பலர் டிவிட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

அழகாக இருந்தாலும் இது கொடிய விஷமுள்ள ஆபத்தான பாம்பு. மனித உடலின் உள்ளேயும் வெளியிலும் ரத்தப் போக்கை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கும் தன்மை கொண்டது என்பதால் சற்று தள்ளியே இருக்க வேண்டும் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

Comments are closed.