ரஜினி, விஜய்யாக இருந்தாலும் இந்த விஷயத்தில் நோ தான்.? இந்த நடிகருக்கு மட்டும் ஒப்புக்கொள்ள என்ன காரணம்.?

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் லேடி சூப்பர் ஸ்டாராக பல ஆண்டுகள் திகழ்ந்தவர் தான் நடிகை நயன்தாரா. இவர் திருமணத்திற்கு பிறகும் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜவான். இந்த திரைப்படத்தின் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகின்றார்.

 

பெரும்பாலும் நடிகை நயன்தாரா தன்னுடைய தயாரிப்பில் வெளியாகும் திரைப்படத்திற்கு மட்டுமே ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் கலந்து கொள்வார். மேலும், மற்ற திரைப்படங்களில் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள மாட்டார்.

 

என் ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் நடித்த திரைப்படத்தில் கூட பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ஷாருக்கான் காக அதை மாற்றியுள்ளார். மேலும், இந்த திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாக்கி வருகின்றது.

 

அதன் காரணமாக பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு பல இடங்களுக்கு நயன்தாராவும் சென்று வருவதாக கூறப்படுகின்றது. இதை அறிந்த தமிழ் சினிமாவ தான் தங்களை வளர்த்து விட்டது. அதற்கு இப்பொழுது துரோகம் செய்யலாமா என்று ஒரு சில கேள்வி எழுப்பி வருகின்றார்கள்…

 

Comments are closed.