வயலில் மகள்களை ஏர்பூட்டி உழுத தந்தை. தானாவே முன் வந்து என்ன உதவி செய்தார் தெரியுமா தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீங்க!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளியில் வசிபவர் நாகேஸ்வர் ராவ்.இவர் திருப்பதியில் டீக்கடை நடத்தி வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்,பருவகாலம் தொடங்கியுள்ளதால்,சொந்த ஊரில் விவசாய வேலைகளை தொடங்கு திட்டமிட்டுள்ளார்.

ஆனால் டிராக்டரை வாடகைக்கு எடுக்க அவரிடம் வசதியில்லை. உழவு மாடுகளையும் பயன்படுத்த வழியில்லை. இதையடுத்து,விவசாயி நாகேஸ்வர் ராவ், தனது இரண்டு மகள்களையும் மாடுகள் போல் பூட்டி ஏர் உழுதுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.தொடர்ந்து,அந்த வீடியோவை தனது Twitter பக்கத்தில் பகிர்ந்த பாலிவுட் நடிகர் சோனு சூட், ஏர் உழுவதற்கு டிராக்டர் வழங்கப்படும் என்றும், அந்த பெண்கள் கல்வியில் கவனம் செலுத்தட்டும் என்றும் பதிவிட்டிருந்தார்

Comments are closed.