கொஞ்சம் வச்சிக்கிட்டு மத்த எல்லாத்தையும் கொ டுத்துடுவேன்”..! பிச்சை எடுத்த காசை, கொரோ னா நிதியாக வழங்கிய முதியவர்..! எவ்வளவு தெரியுமா..?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள “ஆலங்கிணறு” என்ற பகுதியை சேர்ந்தவர் தான் இந்த பூல்பாண்டியன். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர், ஒரு மகள் என 3 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார் இவர். இந்த நிலையில் தான் இவரது மனைவி இ றந்துள்ளார். மேலும், பொது சேவையில் அதிக ஆர்வம் கொண்டார் இவர் என்பதாக கூறப்படுகிறது. மனைவி இ றந்ததற்கு பிறகு பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று,
அந்த பணத்தை பள்ளிகள், ஆத ரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்து வருகிறார்.

இந்த முதியவர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அங்கிருந்த அரசு பள்ளியில் தங்கியபடி மதுரையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று வருகிறார் இவர். மேலும் இவ்வாறு யாசகம் பெற்ற 10 ஆயிரம் பணத்தை கடந்த மே மாதம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார் இவர்.

அதைத்தொடர்ந்து நான்கு முறை ரூ.10000 வீதம் மொத்தமாக இதுவரை, 50 ஆயிரம் ருபாய் பணத்தினை கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் வழங்கியுள்ளார் இந்த முதியவர். இவர் ஏற்கனவே யாசகம் பெற்று புயல் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யாசகம் பெற்ற பணத்தை அரசுக்கு நிதியாக வழங்கிய பூல்பாண்டியனின் சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Comments are closed.