இவர் நம் நாட்டின் பொது சொத்து.? ஆனால், இவருக்கு அரசு மரியாதை செய்யவில்லை.? கோபத்தில் பாரதிராஜா செய்த காரியம்..!!

தமிழ் திரையுலகில் தனது நடிப்பின் மூலம் பலரையும் வியக்க வைத்தவர் தான் நடிகர் சிவாஜி கணேசன் என்பவர். இவர் இன்று உயிருடன் இல்லை என்றால் கூட அவருடைய நடிப்பு இன்றுவரை பல சாதனைகளை செய்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதனை பல பிரபலங்களே முறியடிக்க முடியாமல் திணறி வருகின்றார்கள். இவரைப் பற்றியான ஒரு சில தகவல்களை பாரதிராஜா பகிர்ந்துள்ளார். அது என்னவென்றால் சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்துள்ளது.

 

அந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா இசையமைப்பாளர் இளையராஜா போன்ற பல முன்னணி பிரபலன்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார்கள். அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாரதிராஜா

 

சிவாஜி கணேசனுக்கு உரிய மரியாதையை எந்த ஒரு அரசும் செய்யவில்லை நான் இப்பொழுது இயக்குனராக இருக்கின்றேன் என்றால் அது அவர் எனக்கு போட்ட பிச்சை. மேலும், அவர் இந்த நாட்டின்

 

பொது சொத்து. அவருக்கு ஈடு கொடுப்பதற்கு எந்த ஒரு பட்டமும் கிடையாது என்று மறைந்த நடிகர் சிவாஜி கணேசனை பற்றி இயக்குனர் பாரதிராஜா பல தகவல்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

Comments are closed.