இதுக்கு பதிலா நீ பிச்சை எடுக்கலாம்.? நடிகரை மறைமுகமாக தாக்கிய பிரபலம்..!!

நடிகர் விஷால் சினிமா வாழ்க்கையில் தாமிரபரணி திரைப்படம் ஒரு முக்கிய படமாக உள்ளது. அந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக பூஜை ஆகிய இரண்டு திரைப்படத்திலும் இயக்குனர் ஹரி கூட்டணியில் வெளிவந்து தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் ஹரியுடன் கூட்டணி வைத்து ரத்னம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அப்படி இருக்கும் நிலையில் பேசி ஒன்றில் பங்கேற்ற பொழுது

 

நடிகர் விஷால் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்க நாதனே மறைமுகமாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. பலர் என்னை சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

 

அதைப்பற்றி நான் கவலைப்பட்டதே கிடையாது ஆனால் ஒரு பெண்ணை பற்றியோ அல்லது கதாநாயகி பற்றியோ சிலர் தவறாக பேசி youtube இல் பணம் சம்பாதித்து வருகிறார்கள். அவர்களைப் பார்த்தாலே கோவம் வருகிறது.

 

அவங்க வீட்டிலும் அம்மா பொண்டாட்டி பிள்ளைகள் எல்லாம் இருக்கிறார்கள் அல்லவா அப்படி இருக்கும் பொழுது அவர்களால் இப்படி ஒரு பெண்ணை பற்றி எப்படி தவறாக பேச முடிகிறது. இப்படி நீங்கள்

 

சம்பாதிப்பதற்கு பதிலாக ஏதாவது கோவில் வாசலில் உட்கார்ந்து பிச்சை எடுத்து சம்பாதிக்கலாம் என்று தனது ஆதங்கத்தின் நடிகை விஷால் மறைமுகமாக பயில்வான் ரங்கநாதனை பேசி உள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.