பிரபுதேவா பெயரை பச்சை குத்தியதை , அப்படியே உல்டாவா மாற்றிய லேடி சூப்பர்ஸ்டார் !! இனி மாத்துறதுக்கு அங்க இடம் இருக்கா!

பிரபுதேவா பெயரை பச்சை குத்தியதை , அப்படியே உல்டாவா மாற்றிய லேடி சூப்பர்ஸ்டார் !! இனி மாத்துறதுக்கு அங்க இடம் இருக்கா! நயன்தாரா 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 – ல் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.

என்ன தான் நம்பர் 1 நடிகையாக இருந்தாலும் சர்ச்சைகளிலும் அவர் நம்பர் ஒன் நடிகையாக தான் இருக்கிறார். ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் மூன்று காதல் செய்து மூன்றாவது காதலருடன் தான் தற்போது ஒழுக்கமாக இருக்கிறார் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.நயன்தாராவின் காதல் வலையில் முதல் முதலில் விழுந்தது நடிகர் சிம்புதான். வல்லவன் படத்தின் போது ஏற்பட்ட மோகத்தினால் இருவரும் காதல் என்பதையும் தாண்டி கண்டமேனிக்கு புகைப்படங்களை வெளியிடத் தொடங்கினர்.

அதிலும் லிப் டூ லிப் கொடுத்து புகைப்படம் எடுத்து இணையதளத்தில் அவர்களே போட்டது தான் செம்ம செய்தி. அதன் பிறகு சிம்புவுடன் காதல் முறிவு ஏற்பட்டு சிறிது காலம் தனியாக இருந்த நயன்தாரா அடுத்ததாக ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த முன்னணி நடன இயக்குனர் பிரபுதேவாவை காதலித்தார். இருவரும் அளவு கடந்து ஊர் சுற்றி வந்தனர். பிரபுதேவா மீதுள்ள அதீத காதலால் அவரது பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டார். ஏன் மதம் மாறும் அளவுக்கு கூட சென்று விட்டார் நயன்தாரா. பாவம் நன்றாக இருந்த பிரபுதேவாவை அலையவிட்டு பொண்டாட்டியை டைவர்ஸ் செய்ய வைத்து குடும்பத்தில் இருந்து பிரித்து ஏகப்பட்ட வேலைகள் செய்தாராம் நயன்தாரா.

பின்னர் பிரபுதேவாவையும் கழட்டி விட்டார். தற்போது கடைசியாக பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். நயன்தாராவின் காதல் மோகம் விக்னேஷ் சிவனுடன் முடிந்து விடுமா என கோலிவுட் வட்டாரங்களில் கேள்விகள் எழுகின்றன. ஆனால் நயன்தாராவோ என் மீது நம்பிக்கை வைக்காததால் தான் முன்னாள் காதலர்களை கை விடும் சூழ்நிலை ஏற்பட்டது எனவும் விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் மீது ஏற்பட்ட காதலால் பழைய காதலர் பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்தி என்பதை மறைக்க முடிவு செய்த நயன்தாரா , தற்போது பாசிட்டிவிட்டி என மாற்றியுள்ளார். இருந்தாலும் ரசிகர் வட்டாரங்களில் நயன்தாராவை கலாய்த்து வருகின்றனர்.

Comments are closed.