சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த நடிகை தேவயானி! குடும்பத்தாருக்கு பே ர திர்ச்சி கொடுத்த அவர் திருமணம்..

தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்த தேவயானி.இவருக்கும், பிரபல இயக்குனர் ராஜகுமாரனுக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் நடந்தது, இது காதல் திருமணமாகும்.
தேவயானியின் தந்தை மும்பையை சேர்ந்தவர். அம்மா ஒரு மலையாளி ஆவார். தேவயானியின் காதல் விவகாரம் இவரது வீட்டிற்கு தெரிவித்ததையடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கடைசி வரை இவரது காதலுக்கு சம்மதம் தெரிவிக்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், அவரை வீட்டுக்குள் சிறை வைத்துள்ளனர் இவரது குடும்பத்தார்.ஆனால், ராஜ்குமாரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த தேவயானி, ஒரு நாள் இரவு யாருக்கும் தெரியாமல் சுவரை ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

அந்த அளவுக்கு, ராஜ்குமார் மீது அதீத காதல் கொண்டுள்ளார். தேவயானி ராஜ்குமாரை திருமணம் செய்துகொண்டது அவர்களது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.திருமணம் முடிந்த பின்னர் கூட இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பிறகு, தேவயானிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பின்னர்தான் குடும்பத்தினர் இவர்களோடு உறவாட ஆரம்பித்தார்கள்.ராஜகுமாரனுடனான தனது காதல் குறித்து தேவயானி கூறுகையில், காதலுக்கு காரணமே இருக்க கூடாது, அப்படி இருந்தால் அது உண்மை காதலே இல்லை.

ராஜகுமாரன், இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக இருந்தார், அந்த சமயத்தில் நான் விக்ரமன் இயக்கத்தில் படங்களில் நடித்தேன்.அப்போது எனக்கு வசனம் சொல்லி கொடுப்பது போன்ற உதவிகளை ராஜகுமாரன் செய்வார்.பின்னர் அவர் முதன் முதலில் இயக்கிய நீ வருவாய் என திரைப்படத்தில் நான் நடித்தேன்.அப்போதும் எங்களுக்குள் இயக்குனர் – கதாநாயகி உறவு தான் இருந்தது.

பின்னர் காரணமே இல்லாமல் அவர் மீது காதல் வந்தது, முதன் முதலில் அவரை பிடிக்க காரணம் அவரின் மரியாதையான குணம் தான்.மேலும் அவருக்கு எந்தவொரு கெட்டப்பழக்கமும் இல்லை, இதெல்லாம் தான் அவர் மீது எனக்கு ஈர்ப்பு கொடுத்தது என கூறியுள்ளார்.

Comments are closed.