பார்வையற்ற முதியவருக்கு உதவிய பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு!!

கேரளாவில் நடைபெற்ற சம்பவம் ஒன்றின் காணொளி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. குறித்த காணொளியில் பெண் ஒருவர் மூச்சிரைக்க ஓடி வந்து பேருந்தை நிறுத்துகிறார். எதற்காக அவர் பேருந்தை நிறுத்தினார் என யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சாலையின் ஓரமாக மாற்றுத்திறனாளி ஒருவர் நின்று கொண்டு இருக்கிறார். அவர் அந்த பேருந்தில் செல்ல வேண்டும். ஆனால் பேருந்து வேகமாகச் சென்றதால் அவரால் ஏற முடியாமல் போனது.

இதைக் கவனித்த அந்த பெண், ஓடி வந்து பேருந்தை நிறுத்தி, நடத்துநரிடம் விபரத்தைக் கூறுகிறார்.
பின்னர் அந்த பெண் மாற்றுத் திறனாளியை அழைத்துக் கொண்டு அந்த பேருந்தில் ஏற்றி விட்டுத் திரும்பிச் செல்கிறார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட குறித்த காட்சி வைரலாகியதோடு, பார்வையற்றவருக்காக ஓடிச்சென்று பேருந்தை நிறுத்திய பெண்ணுக்கு பாராட்டு குவிந்தது

இந்த நிலையில் பார்வையற்ற வயதானவருக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி உதவி செய்த பெண்ணுக்கு அவர் வேலை செய்யும் நகைக்கடை முதலாளி வீடு ஒன்றை அன்பளிப்பாக கொடுத்துள்ளார். இதுகுறித்து சுப்ரியா பேசுகையில் , ‘நான் என் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் தான் வாழ்ந்து வருகிறேன். ஒரு சின்ன உதவிக்கு என்னுடைய போஸ் சொந்தமாக ஒரு வீடு வழங்கியுள்ளார் நான் செய்த
உதவிக்கு என்னுடன் வேலை செய்யும ஊழியர்கள் தெரிவித்த வாழ்த்துகள் என் கண்ணில் சந்தோஷ கண்ணீர் வரவழைத்தது என்று கூறியுள்ளார்.

Comments are closed.