அடிக்கடி நெஞ்சு வலி வந்து மாரிமுத்துவை எச்சரித்தது.? முன்கூட்டியே மரணத்தை கணித்து விட்டார்..!! வீடியோவை கண்டு சோகத்தில் ரசிகர்கள்..

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை குறுகிய காலகட்டத்தில் ஏற்படுத்திக் கொள்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அப்படி குறுகிய காலகட்டத்தில் தொலைக்காட்சியில் நடித்து தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் மறைந்த நடிகர் மாரிமுத்து என்பவர்.

 

இவர் சன் தொலைக்காட்சியில் நடிப்பதற்கு முன்பாக இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். மேலும், இவர் வசனம் எழுதுபவராகவும் இருந்து வந்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து இவர் 2008 ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும் மற்றும் 2014 ஆம் ஆண்டு புலிவால் போன்ற இரண்டு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். ஆனால், இந்த இரண்டு திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.

 

அதனைத் தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து நிமிர்ந்து நில், ஜீவா, கொம்பன், திரிஷா இல்லனா நயன்தாரா, மாப்பிள்ளை சிங்கம்

 

மருது, யாக்கை, கூட்டத்தில் ஒருவன், பரியேறும் பெருமாள், சண்டகோழி 2, அன்பறிவு, விக்ரம் சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் உள்ளிட்ட திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது

 

அடிக்கடி நெஞ்சு வலிப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. மேலும், ஏதோ தப்பா இருக்கின்றது என்று சொல்வது போன்ற காட்சிகள் எதார்த்தமாக அதில் வைத்துள்ளார்கள். ஆனால், திடீரென்று அவர் உயிரிழந்த உடன் பலரும் இந்த வீடியோவை இணையதளத்தில் வைரலாகி வருகின்றார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.