என்னது, இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கிறாரா.? வெளிவந்த தகவல்.. கதையைக் கேட்டு விஜய் எடுத்த அதிரடி முடிவு..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் மோகன் ராஜா என்பவர். இவர் அவரது தம்பியான ரவியை வைத்து ஜெயம் என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரானார்.

 

அந்த படத்திற்கு பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி, தனி ஒருவன் போன்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய கூட்டணிகள் முதன்முறையாக நடிகர் விஜயுடன் இணைந்து 2011 ஆம் ஆண்டு எடுத்த திரைப்படம் தான் வேலாயுதம். இந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்லா வரவேற்பு பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் வெற்றியுடன் கூட்டணி அமைப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார். அந்த வகையில் ஒரு முறை நடிகர் விஜய் சந்தித்து இரட்டை வேடத்தில் தில்லர் கலந்த ஒரு கதையை கூறியுள்ளார்.

 

அந்த கதையை கேட்டவுடன் அருண் விஜயின் தடம் திரைப்படம் போன்று இருப்பதாக நடிகர் விஜய் யோசித்து வேண்டாம் என்று கூறிவிட்டார். அதன் பிறகு அந்த கதையை இன்னும் வெறித்தனமாக மாற்று அமைத்துள்ளேன்.

 

அது மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு சூப்பர் ஹிட் கதையை விஜய்க்காக நான் தயார் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். கூடிய விரைவில் விஜயுடன் கூட்டணி வைத்து திரைப்படத்தை இயக்குவேன் என்று இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.