அமீர் பாவணியை பிரியப் போகிறாரா.? அவரை வெளியிட்ட தகவல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்த காலகட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் பாவணி மற்றும் அமீர். இந்த நிகழ்ச்சியில் இருவரும் காதலிப்பதாக கூறி வந்த நிலையில்

 

அதன் மூலம் இவர்கள் இருவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு ஒன்றாக திரைப்படத்தில் நடிப்பது வெளியே செல்வது ஒன்றாக எடுக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவது போன்ற விஷயத்தை தொடர்ந்து செய்து வந்துள்ளார்கள்.

 

மேலும், அமீரும் தன்னுடைய காதலை சொல்லி பாவணியை ஏற்றுக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து இன்னும் ஒரு சில திரைப்படத்தில் நடிக்கும் ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். கடந்த, சில வாரங்களுக்கு முன்பாக இவர்கள் இருவரும் காதல் ஜோடியாக பல இடத்திற்கு சென்று கொண்டு இருந்தார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அமீர் எப்பொழுது பாவணியை திருமணம் செய்து கொள்வீர்கள் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வந்துள்ளார்கள். இதனை தொடர்ந்து ரசிகர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் தற்போது சிங்களாக தான் இருக்கின்றீர்களா என்று கேட்டுள்ளார்கள்.

 

அதற்கு அமீரும் ஆமாம் என்று தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டவுடன் பலரும் என் பாவணியை பிரிந்துள்ளீர்கள் உங்கள் வேலையை முடித்துக் கொண்டு அவரை விட்டு விட்டீர்களா என்று பலரும் பல விதமான கருத்துக்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார்கள்…

 

Comments are closed.