நடிகர் அதர்வாவுக்கு விரைவில் காதல் திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா? மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!!

அதர்வா முரளி, “பாணா காத்தாடி” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகினர். அந்த படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பின் தமிழ் சினிமாவில் நல்ல கதைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து கொண்டு இருக்கிறார் அதர்வா.நடிகர் அதர்வாவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வைரலாகி வருகின்றது.அதுவும் அவர் காதலித்து வரும் பெண்ணுடனே திருமணம் என்று அவரது நண்பர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது, அதர்வாவிற்ரக்கும் கோவாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையில் சில வருடங்களாகவே காதல் இருந்து வருகிறதாம்.காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் வழங்கிய பின்னரே திருமணம் செய்து கொள்ளலாம் என்று உறுதியாக இருந்து வந்தார்கள்.

ஆனால், இரு வீட்டார் சம்மதம் தாமதம் ஆனதால் அதர்வாவின் தம்பி திருமணம் முன்கூட்டியே முடிந்து விட்டது.தற்போது தம்பிக்கு திருமணம் முடிந்து விட்டது என்பதால் தன்னுடைய திருமணம் குறித்து முடிவெடுக்க வீட்டில் கேட்டிருக்கிறார்.அவர்களது அம்மாவும் சம்மதித்து விட்டதாக சொல்கிறார்கள்.

இதனால் ஜனவரி மாதத்திற்கு மேல் அதர்வாவின் திருமணம் நடைபெறும் என்றும் நண்பர்கள் வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.இந்த தகவல் பெண் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருநடதாலும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.


Comments are closed.