ஜெயிலர் வெற்றிக்கு பின் தலைகால் புரியாமல் ஆடும் நெல்சன்..!! அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்..!!

தமிழ் சினிமா உலகில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட இயக்குநர்கள் ஏராளமானவர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் என்பவரும் ஒருவர். இவரது இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய் கூட்டணியில் வெளிவந்த பீஸ்ட் படம் ஓரளவுக்கு நல்ல கலவையான விமர்சனம் பெற்றுள்ளது.

 

மேலும், ரஜினியின் இந்த வெற்றி திரைப்படத்திற்கு பிறகு ரஜினி தன்னை நம்பி இந்த திரைப்படத்தை கொடுத்துள்ளார் என்று அவர் வெளிப்படையாக பேசி உள்ளார். அதன் அடிப்படையில் கூட நான்

 

இப்படி ஒரு பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்துள்ளேன் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். மேலும், திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக தயாரிப்பு நிறுவனம் தனக்கும் ரஜினி சாருக்கும் ஆனிவத்துக்கும் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய முதல் படமான கோலமாவு கோகிலா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். மேலும், அந்த படத்தின் நயன்தாரா மற்றும் யோகி பாபு கூட்டணி மிகப்பெரிய அளவில் ரசிகர் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட நல்ல

 

ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். அந்த திரைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் மூலம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

 

அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் துல்கர் சல்மான் போன்ற நடிகர்களை வைத்து அந்த நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் பல தகவல்களை வந்து கொண்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து ஜெயிலர் இரண்டாம் பாகத்தையும் எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் பல தகவல்கள் வெளிவந்து படுகின்றது…

 

Comments are closed.