பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு வானொலி நிறுவனம் செய்த துரோகம்? வேலையை தூக்கி எறிந்த நிலை..!! என்ன  நடந்தது  பாருங்க.!!

தமிழ் திரையுலகில் தற்போது முக்கிய நட்சத்திரங்களாக வலம் வரும் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் மற்றும் சந்தானம் போன்றவர்கள் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் இருந்து வந்தவர்கள். விஜய் டிவிக்கு வந்துவிட்டாளே, அடுத்து அவர்களுக்கு நிச்சயமாக வெள்ளித்திரையில் ஒரு வாய்ப்பாவது கிடைத்துவிடும். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தான், மகாபா ஆனந்த்.நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதில், வல்லவரான இவர், வானவராயன் வல்லவராயன் திரைப்படம் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமானார். அதன் பின் மா.கா.பா நவரச திலகம், கடலை, மீசையை முறுக்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மா.கா.பா வின் இந்த வெற்றிக்கு அவரின் மனைவியும் மிகப் பெரிய காரணம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். சுவர்களில் வால் போஸ்ட்டர் எல்லாம் ஒட்டி தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளார் மா.கா.பா. சினிமா காரம் காபி மூலம் விஜய் டிவியின் கதவு இவருக்காகத் திறந்தபிறகு தன் திறமையின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தினார்.

 

இந்நிலையில் ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியா பிரபல வானொலியில் ஆர்ஜேவாக பணியாற்றிய சமயத்தில் தான் பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றினார்.தொலைக்காட்சியில் பணியாற்றி கொண்டிருந்த நேரத்தில் வானொலி நிறுவனம் அதிக சம்பளம் தருகிறோம், எங்களிடம் மட்டும் தான் பணியாற்ற வேண்டும், தொலைக்காட்சியில் பணியாற்ற முடியாது என கூறி வந்து விடுங்கள் என்று கூறி வற்புறுத்தியுள்ளனர்.

 

இதனால் வேலையும் வேண்டாம் சம்பளமும் வேண்டாம் என்று அங்கிருந்து வெளியே வந்துவிட்டாராம் மா கா பா ஆனந்த். தற்போது பிரபல தொலைக்காட்சியில் அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளர்கள் வரிசையில் இவரும் தற்போது இருந்து வருகிறார்.


Comments are closed.