என் மகள் டாக்டரா வரணும்… 15 ஆண்டு காலம் சிறையில் சம்பாதித்த பணத்தில் ஸ்மார்ட் போன் வாங்கிய தந்தை!

தந்தை ஒருவர் 15 ஆண்டு காலம் சிறையில் சம்பாதித்த பணத்தில் மகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுத்த சம்பவம் கடும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு சத்தீஸ்கரில் உள்ள அம்பிகாபூர் என்ற அம்தர்ஹா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் நாகேஷியா (40).இவர் 2005 ஆண்டில் தந்து தந்தை வழி உறவினரை சொத்து தகராறு காரணமாக கொலை செய்த வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர்.
அந்த வழக்கில் ஆனந்துக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. இந்நிலையில், தனது சிறை தண்டனை முடிந்து தற்போது விடுதலையாகி வீட்டிற்கு வந்துள்ளார். இவருக்கு யாமினி என்ற மகள் உள்ளார். யாமினி சிறிய மகளாக இருக்கும்போது ஆனந்த் சிறைக்கு சென்ற நிலையில் தற்போது அவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கில் பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், யாமினியிடம் செல்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள அருகிலுள்ள வீடுகளில் உதவி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து, ஆனந்த் சிறையில் வேலை செய்து சம்பாதித்த பணத்தை வைத்து தனது மகளுக்கு ஸ்மார்ட் போனை வாங்கி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ஸ்மார்ட்போன் இல்லாததால் என் மகள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாமல் தவிப்பதை நான் சிறையில் இருந்து வந்ததும் தெரிந்துகொண்டேன். என் மகள் மருத்துவராக வேண்டும் என ஆசை படுகிறாள்.

அவர் ஒரு டாக்டராகி மருத்துவத் தொழிலில் சேருவதன் மூலம் மனிதகுலத்திற்கு தனது சேவையை வழங்க வேண்டும் என்பதை நானும் விரும்புகிறேன். சிறையில் இருந்தபோதுதான் கல்வியின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்தேன். நான் சிறையில் சம்பாதித்த பணத்தை கொண்டு அவருக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுத்தேன்.என் மகள் தனது கனவைத் தொடர எந்த இடையூறும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்த நான் அதேகேற்ற முயற்சிகளை எடுப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.