அடுத்தடுத்து காரசாரமாக வெடித்த சர்ச்சைகள்…. சீண்டிய கஸ்தூரி… வனிதா எடுத்த அதிரடி முடிவு? கடும் ஷாக்கில் ரசிகர்கள்

திருமணத்திற்கு பின்னர் நடிகை வனிதா பல்வேறு விமர்சனங்களுக்கு ட்விட்டரில் காரசாரமாக பதிலளித்து வந்தாரஒரு கட்டத்தில் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்த ட்வீட்டுகளுக்கும் ஆவேசமாக ரிப்ளை செய்தார்.மேலும் கஸ்தூரியை ட்விட்டரிலிருந்தும் என்னுடைய வாழ்க்கையிலிருந்தும் பிளாக் செய்கிறேன் என்று கூறியதோடு என்னுடைய சொந்த வாழ்க்கையில் நீங்கள் தலையிட வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ட்விட்டரிலிருந்து வெளியேறியுள்ளார் . இறுதியாக வனிதா அதிரடியாக பதிவு ஒன்று வெளிட்டுள்ளார்.“ட்விட்டர் முழுக்க தனிப்பட்ட கொள்கைகளை வைத்துக் கொண்டு போலியான மனிதர்களாக இருக்கிறார்கள். மிகவும் குறைவான அளவில் மட்டுமே நேர்மையானவர்கள் இருக்கிறார்கள். அதில் பெரும்பாலான திரைபிரபலகள் தன்னை நேர்மையானவர்களாக காட்டிக் கொள்ள தந்திரமாக செயல்படுகிறார்கள்.

எதிர்மறையான ஹேஷ்டேக்குகளை உருவாக்குவது நமது கலாச்சாரமோ பண்பாடோ அல்ல.
போலியான நாடகங்கள் மற்றும் அருவருக்கத்தக்க ட்ரெண்டிங்கினால் நான் அப்செட்டாக இருக்கிறேன். நான் ஒருபோதும் போலியாக இருந்ததில்லை. இருக்கவும் மாட்டேன். இதுபோன்ற விஷயங்களுக்கு அப்பாற்பட்டு தனியாக இருக்கிறேன். எதிர்மறையான எண்ணங்களை புறக்கணிக்கவும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது வனிதா தனது ட்விட்டரில் இருந்து விலகியுள்ளார். ஆனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருக்கிறார் வனிதா.

இதேவேளை, இதனை பார்த்த நடிகை கஸ்தூரி, என்னாச்சு? (அ)சிங்கப்பெண் எங்க ஓடிட்டாங்க.. ஏதாவது காக்காவை பார்த்து ப யமா அல்லது உண்மையை பார்த்து ப யமா? இப்போது உங்களுக்கு தெரியும். நீங்கள் தான் பிக்கஸ்ட் பாஸஸ் யார் தைரியமானவர் யார் காமெடி பீஸ் என தீர்மானிப்பதற்கு என பதிவிட்டுள்ளார்.

Comments are closed.