உதவி கேட்ட டிரைவர்.! நான் என்ன செய்ய முடியும் என்ற அஜித் ..!! கடைசியில் நடந்தது என்ன தெரியுமா ?

தமிழ் சினிமாவில் தல என்றும் அல்டிமேட் ஸ்டார் என்றும் தமிழ் ரசிகர்களை தாண்டி பல மொழி ரசிகர்களை தன்பின் வைத்துள்ளவர் நடிகர் அஜித்குமார். அஜித் படங்கள் சமீபகாலமாக ஆரம்பத்தில் கொடுத்து வந்த ஹிட்டினை கொடுத்து வருகிறார்.தற்போது லாக்டவுன் என்பதால் வலிமை படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அஜித் எவ்வளவு நல்ல மனிதர் என்று சொல்வது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அஜித் தன்னிடம் உதவி என்று கேட்பவர்களுக்கு உடனே உதவக் கூடியவர். அப்படி தான் அவரை பற்றி நாம் அறிந்திருக்கிறோம். இங்கேயும் ரெட் பட படப்பிடிப்பில் அப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் ஷஹீர் ஹைல் ஒரு பேட்டியில், ரெட் பட படப்பிடிப்பில் டிரைவர் ஒருவர் தயாரிப்பு குழுவினர் சம்பளம் தருவதில்லை என வருந்தி அஜித்திடம் கூறியுள்ளார்.

அதற்கு அஜித், நான் என்ன செய்ய முடியும், புரொடக்ஷனில் போய் கேளுங்கள் என்று கூறிவிட்டாராம், இதனால் டிரைவர் மிகவும் ஷா க் ஆனாராம். பின்னர் கொஞ்ச நேரத்தில் அஜித் படப்பிடிப்பிற்கு வராமல் ஹோட்டல் சென்றுவிட்டாராம். அங்கு தயாரிப்பு குழு படப்பிடிப்பிற்கு வாருங்கள் என்று கூப்பிட்டால் முதலில் அவர்களுக்கு சம்பளம் தாருங்கள் பின் வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

இதனால் உடனே டிரைவர் மற்றும் சில தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உடனே சம்பளம் கொடுக்கப்பட்டதாம். மற்றவர்களை பற்றி யோசிக்கும் அஜித் அதனால் தான் அவரை தல என அந்த நடிகர் பேட்டியில் கூறியுள்ளார்.


Comments are closed.