நடிகர் கார்த்திக்கு குழந்தை பிறந்தது.. செம்ம சந்தோஷத்தில் குடும்பத்தினர்.!என்ன குழந்தை தெரியுமா.?

நடிகர் சிவகுமாரின் மகன்கள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர்கள் சூர்யா-கார்த்தி.கார்த்திக் சிவகுமார் , அவரது மேடைப் பெயரான கார்த்தியால் நன்கு அறியப்பட்டவர், முதன்மையாக தமிழ் சினிமாவில் பணியாற்றும் ஒரு இந்திய திரைப்பட நடிகர்.  அவர் மூன்று பிலிம்பேர் விருதுகள் தெற்கு, ஒரு எடிசன் விருது, ஒரு சிமா விருது மற்றும் ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றுள்ளார்.தமிழ் திரையுலகில் இருந்து தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தற்போது சுல்தான் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

 

2011ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் முதலில் பெண் குழந்தை பிறந்தது. இந்த பெண் குழந்தையின் பெயர் ‘உமையாள்’.சமீபத்தில் தான் மீண்டும் கார்த்தியின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்திக்கு இரண்டாம் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆம் இதனை அதிகாரப்பூர்வமாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

 


Comments are closed.