கொ ள்ளை அழகுடன் குழந்தையை கொஞ்சிய சினேகா! குட்டி தேவதையை அள்ளி அனைத்த பிரசன்னா : தீயாய் பரவும் காட்சி

தமிழ் சினிமாவின் சிரிப்பழகி சினேகா கடந்த 2001 ம் ஆண்டு வெளியான “என்னவளே” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பின்னர் பல படங்களில் நடித்து, நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 2015ல் இவர்களுக்கு பிரசன்னா விஹான் என்ற மகன் பிறந்தார்.
பின்னர் குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அதைடுத்து கடந்த ஜனவரி 24 ஆம் தேதி சினேகாவுக்கு இரண்டாவதாக ஆத்யந்தா என்ற பெண் குழந்தை குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் நடிகை சினேகா மற்றும் பிரசன்னா தனது மகன் மற்றும் மகளுடன் நடத்திய போட்டோ ஷூட்டின் காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. சினேகா-பிரசன்னா ஜோடிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் நடிகர் பிரசன்னா தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

குட்டி சினேகாவை கண்ட ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களை அள்ளி ரசிகர்கள் வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க தங்களது மகளுக்கு ஆத்யந்தா என்று பெயர் வைத்துள்ளதாக நடிகர் பிரசன்னா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர்கள் நடத்திய போட்டோ ஷூட்டின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

Comments are closed.