ஐசியூ-வில் கேக் வெட்டி கொண்டாடிய எஸ்பிபி: இன்ப வெள்ளத்தில் ரசிகர்கள்

கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ராமணியம் ஐ.சி.யூவில் கேக் வெட்டி தன்னுடைய திருமணம் நாளை கொண்டாடியுள்ளார்.கொரோனா வைரஸால் பாதிக்கபட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75). சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம் ஹெல்த் கேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வருகிறார்.அவருக்கு, எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்திய மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுடன், எம்.ஜி.எம்., மருத்துவக் குழுவினர் எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன் எஸ்.பி.பி.,மகன் சரண், அப்பாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாகவும், கடவுள் அருளாலும், உங்கள் அனைவரது பிரார்த்தனையாலும், வரும் திங்கட் கிழமைக்குள் அப்பாவைப் பற்றி நல்ல செய்தி வரும் என்று நம்புவதாக தெரிவித்திருந்தார்
இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் – சாவித்திரிக்கு இன்று(செப்டம்பர் 5-ஆம் திகதி) திருமண நாள

இதனால் இவர்களின் திருமணம் ஐ.சி.யூ-வில் கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
அதன் படி பிரத்யேகமாக கேக் வாங்கி வரப்பட்டு, ஐ.சி.யூ.,வில் வைக்கப்பட்டது. டாக்டர்கள் உதவியுடன் எஸ்.பி.பி.- சாவித்திரி இருவரும்,கேக் வெட்டி திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
எஸ்.பி.பி. படுத்து கொண்டே கேக் வெட்டினார்.இந்த நெகிழ்ச்சி நிகழு குறித்து மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி அவரின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Comments are closed.