இத்தனை ஆண்டுகள் ஒதுங்கி இருந்த ரம்பா மீண்டும் நடிக்க வருகின்றாரா? உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படங்கள்

நடிகை ரம்பா இன்ஸ்டாகிரமில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். பலர் தங்கள் கமென்ட்களை பதிவு செய்துள்ளனர்.இது என்னுடைய கிளிக்ஸ், கண்களுக்கும் உதட்டுக்கும் மட்டும் லைட்டான மேக்கப் போட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.ஒரு நெட்டிசன், ‘நீங்க எப்பவுமே அழகுதான். உங்களுக்கு எதுக்கு மேக்கப்? என்று கேட்டுள்ளார். இன்னொரு ரசிகர், சீக்கிரமா சினிமால நடிக்க வாங்க ரம்பா, உங்களை ரொம்ப மிஸ் பண்றோம் என்று கூறியுள்ளார்.அந்த குழந்தைத்தனமான சிரிப்பு செம அழகு என்று சிலர் கூறியுள்ளார். ஒரு ரசிகை, சமீபத்தில் நீங்கள் நடித்த சில படங்களை சேனல்களில் பார்த்தேன். நீங்க மிரட்டி இருக்கீங்க என்று கூறியுள்ளார். இன்னும் சிலர் அன்றும் இன்றும் அதே கொள்ளை அழகு என்று வர்ணித்துள்ளனர்.

தற்போது சமூகவலைத்தளத்தின் மீது அதிக ஆர்வமாக இருக்கும் ரம்பா மீண்டும் நடிக்க வர வாய்ப்பு இருப்பதாக கருதுகின்றனர். நடிகை ரம்பா கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதற்கு பிறகு நடிப்புக்கும் டாட்டா காட்டி விட்டார். திருமணத்திற்கு பின்னர் நதியா முதல் ஜோதிகா வரை பலர் மீண்டும் நடித்து வரும் நிலையில் ரம்பாவும் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.அது குறித்த ரம்பா இது வரை எந்த அறிவிப்புகளையும் விடுக்க வில்லை. இன்நிலையில் ரசிகர்களே அவரை அழைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

My clicks 😍tried light makeup for eyes n lips …

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_) on

Comments are closed.