ஒரு பாடலுக்கு தான் நடித்தேன்..!! ஷாருக்கான் இன்று வரை என்னை ஞாபகம் வைத்துள்ளார்.? ஆச்சரியத்தில் நடிகை..!!

தமிழ் சினிமாவில் இருந்து தற்போது ஹிந்தி சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருபவர் தான் இயக்குனர் அட்லீ. இவர் தற்பொழுது ஹிந்தியில் ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த திரைப்படத்தின் நடிகை ஷாருக்கான் நடித்து வருகின்றார். அதன் காரணமாக திரைப்படத்தின் மீது பெரிய ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. மேலும், அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகின்றார்.

 

மேலும், நடிகை பிரியாமணி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் ஷாருக்கான் உடன் பிரியாமணிக்கு இது இரண்டாவது திரைப்படம்.

 

இந்த திரைப்படத்திற்கு முன்பாகவே சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை பிரியாமணி நடனமாடி இருப்பார். அப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது

 

நடிகை பிரியாமணி சென்றுள்ளார். அப்பொழுது ஷாருக்கான் இவரை பார்த்தவுடன் அவரை கட்டிப்பிடித்துக் கொண்டுள்ளார். சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

 

அவர் சொன்னவுடன் இத்தனை ஆண்டுகள் மறக்காமல் என்னை ஞாபகம் வைத்தது எனக்கு ஆச்சரியமாக இருந்ததாக நடிகை பிரியாமணி சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.