பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ரா ரூமிலிருந்து அலறியடித்து ஓட்டம் ! என்ன நடந்தது தெரியுமா..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. சென்ற வாரம் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் விரைவில் நுழைவார் என கூறப்படுகிறது. மேலும் இதற்காக அவர் ஒரு தனியார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில் அவர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து நள்ளிரவு 11 மணிக்கு அலறியடித்து கத்திக்கொண்டே ஓடிவந்துள்ளார். மேலும் “என்னை   கொ லை   செய்ய வராங்க, ரூம் கதவை யாரோ வேகமா தட்டினாக” என கூறியுள்ளார்.

பின்னர் வரவேற்பு தளத்திலே சில மணிநேரம் பித்து பிடித்தது போல் அமர்ந்திருந்தாராம் சுசித்ரா, அதன்பின் சேனல் தரப்பில் அவரிடம் பேசி ரூமிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள். மேலும் அங்கு வேலை செய்வோர் மற்றும் விருந்தினர்களின் 3 மணி நேர துக்கத்தை கெடுத்துள்ளாராம் சுசித்ரா.

பிறகு அவருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.


Comments are closed.