ஆரவின் திருமணத்திற்கு ஓவியா வராதது ஏன்?.. ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த சுஜா வருணி

பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளரான ஆரவிற்கு நேற்று திருமணம் நடைப்பெற்றது. இவரின் காதலியான நடிகை ராஹி, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இமை போல் காக்க’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இவர்களின் திருமணத்திற்கு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிந்து மாதவி, சக்தி, சினேகன், கணேஷ் வெங்கட் ராமன், சுஜா வருணி என்று பலர் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்துத்துகளை தெரிவித்தனர். பல்வேறு பிரபலங்களும் சமூக வலைத்தளத்தில் ஆரவ்விற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது ஆரவ்வை உருகி உருகி காதலித்து வந்த ஓவியா திருமண நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அதே போல செல்லவில்லை சமூக வலைதளத்தில் கூட ஆரவ்விற்கு எந்த ஒரு வாழ்த்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

இப்படி ஒரு நிலையில் ஆரவ் திருமணத்திற்கு சென்ற சுஜா வருணியிடம் ரசிகர் ஒருவர், ஓவியா எங்க அக்கா என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த சுஜா வருணி, அவங்க வீட்ல இருப்பாங்க என்று பதில் அளித்துள்ளார்.

Comments are closed.