விஜய் போல் என்னால் அதை செய்ய முடியாது.? எனக்கு எது வருமோ அதை தான் நான் செய்ய வேண்டும்.? அப்போதுதான் என்னை எல்லோரும் ரசிப்பார்கள்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவராக வலம் வர தொடங்கி இருப்பவர்தான் இயக்குனர் அட்லி. இவர் தமிழ் சினிமாவை தாண்டி தற்போது இந்தியிலும் கால் பதித்துள்ளார். அந்த வகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

 

இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் நேற்று மாலை பிரம்மாண்டமாக சென்னையில் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்தின் விழாவில் பல நட்சத்திரங்களும் படத்தில் வேலை செய்தவர்களும்

 

அனைவரும் கலந்து கொண்டுள்ளார்கள். ஆனால், நடிகை நயன்தாரா மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வழக்கம் போல் இந்த நிகழ்ச்சி பிரமோஷனுக்கும் நடிகை நயன்தாரா வரவில்லை என்ற தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சாருக் கான் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய வேலை செய்து அனைவரையும் பற்றியும் பேசி உள்ளார். அப்பொழுது நடன இயக்குனர் சோபி மாஸ்டர் குறித்தும் பேசியுள்ளார்.

 

அவர் சொல்லும் பொழுது என்னால் விஜய் போன்ற எல்லாம் நடனமாட தெரியாது கடினமான ஸ்டெப் எல்லாம் கொடுக்காதீர்கள் என்று கூறினேன் என்று வெளிப்படையாக ஷாருக்கான் பேசியுள்ளார். இந்த தகவல் தற்போது அரசியல் மத்தியில் மிகவும் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

Comments are closed.