செம்பருத்தி ஹீரோவுக்கு திருமணம்! தீயாய் பரவும் நிச்சயதார்த்த புகைப்படம்…. ஷாக்கான ரசிகர்கள் பொண்ணு யார் தெறியுமா!!

செம்பருத்தி என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் அக்டோபர் 16 2017 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் தெலுங்கு மொழி தொடரான முத்த மந்தரம் என்ற தொடரின் கதை அம்சத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் மற்றும் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஷபானா நடிக்கின்றனர் இந்த தொடர் தமிழ் மக்களால் அதிகம் பார்க்கப்படும் சிறந்த 5 தொடர்களுக்குள் முதன்மையானதாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் செம்பருத்தி சீரியல் புகழ் கதிர்வேல் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் பற்றி தெரிவித்துள்ளார். அவருக்கு திடீரென்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளார். அதில், என்னை மிகவும் நேசிக்கும் உங்களை அழைக்காததற்கு மன்னித்துக்கொள்ளுங்கள். இது எனக்கு மிக முக்கியமான நாள். எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.

அதற்கு காரணம் இந்த ஊரடங்கு தான். நான் உங்களை என் திருமணத்துக்கு நிச்சயம் அழைப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் ஒரு சேர வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரின் நிச்சயதார்த்த புகைப்படத்தினையும் பகிர்ந்து வருகின்றனர்.

Comments are closed.