மீண்டும் சர்ச்சை ஏற்படுத்திய இளையராஜா..!! மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ்.?

கடந்த சில ஆண்டுகளாக பல உண்மை சம்பவங்களை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கி பல திரைப்படங்கள் வெற்றி கண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ்.

 

இந்தத் திரைப்படம் தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானல் சுற்றுலா பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து மலையாள சினிமாவில் உருவாக்கப்பட்டு. அதன் பிறகு உலகம் முழுவதும்

 

நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 200 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த திரைப்படத்தை கமல் ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்கள் பார்த்துவிட்டு அவர்களை

 

நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இளையராஜா தரப்பில் இந்த படத்திற்கு தயாரிப்பு நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது இந்த படத்தின் குணா படத்தின்

 

இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடல் இடம் பெற்றிருக்கும். அந்த பாடலுக்கு இளையராஜாவிடம் உரிய அனுமதி வாங்காமல் படத்தில் பயன்படுத்திய காரணத்திற்காக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று

 

வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இதற்கு உரிய இழப்பீடு தொகை வழங்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளையராஜா தரப்பில் இருந்து கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.