ஜூனியர் சீனியர், சூப்பர் மாம் போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!!

அள்ளித்தந்த வானம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கல்யாணி சினிமாவை விட்டுச் சென்றதற்கு காரணத்தினை கூறி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.இவரது பெயர் பூர்ணிதா. கலைத்துறையில் இருந்த ஆர்வம் காரணமாக தனது பெயரை கல்யாணி என்று மாற்றிக்கொண்டார்.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் சில திரைப்படங்களில் நடித்ததோடு பீச் கேர்ள்ஸ், ஜூனியர் சீனியர், சூப்பர் மாம் போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.இறுதியாக இயல்புயல் படத்தில் நடித்து பின்பு சினிமாவை விட்டு வெளியே சென்றார். இதற்கான காரணத்தினை சமீபத்தில் கூறியுள்ளார்.

நான் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கிய போது பலரும் என் அம்மாவிடம் பேசுவார்கள். அவருக்கு தமிழ் தெரியாது அவர்கள் பேசும்போது ஒரு பெரிய ஹீரோ,பெரிய தயாரிப்பாளர்கள் போன்றவர்களின் படங்கள் தனக்கு வாய்ப்பு வந்து இருப்பதாக கூறியவுடன் என் அம்மா மிகவும் சந்தோஷத்தில் அந்த வாய்ப்புகளுக்கு சரி என்று கூறி விடுவார்.

ஆனால், அதன் பின்னர் நான் சினிமாவில் ஒரு சில அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று என் அம்மாவிடம் கூறினார்கள். ஆரம்பத்தில் அது ஏதாவது கால்ஷீட் அட்ஜெஸ்ட் ஆரம்பத்தில் இருக்கும் என்று என் அம்மா நினைத்தார். ஆனால் அதன் பின்னர் அவர்களுக்கு தவறாக பட போனை துண்டித்து விட்டார் என்று கூறியுள்ளார்.
இந்த காரணத்தினால்தான் நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று கூறிய கல்யாணி தொலைக்காட்சியில் கூட தனக்கு இது போன்ற தொல்லைகள் இருந்ததாக கூறியுள்ளார்.

Comments are closed.