மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்ட விஜயகாந்த்..!! மூன்றாவது நாளாக தொடரும் சிகிச்சை..!! மருத்துவமனை வாசலில் குவிந்த ரசிகர்கள்..!!

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திய ஒரு மாபெரும் கலைஞர் இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து தனக்கென்று

 

ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி இருந்தார். மேலும், ஒரு சமயத்தில் சினிமாவில் இருந்து விலகி அதிகமாக அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்பொழுது உடல்நல குறைவின் காரணமாக அரசியலில் ஈடுபடாமல்

 

சினிமாவில் செயல்படாமல் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். தீபாவளி பண்டிகையை கூட தனது குடும்பத்துடன் கொண்டாடிய நிலையில் திடீரென்று தற்பொழுது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

 

கடந்த, மூன்று நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் தற்பொழுது இவர் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

 

அந்த வகையில் தகவலை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள். மேலும், தற்பொழுது விஜயகாந்த் நலமுடன் தான் இருக்கிறார் கூடிய விரைவில் குணமடைந்து வீடு திரும்பி விடுவார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்…

 

 

Comments are closed.