விருது விழாவில் கலந்து கொண்ட சிவாஜி-கவுண்டமணி..!! சிவாஜியை கலாய்த்த நக்கல் மன்னன்..!! விழுந்து விழுந்து சிரித்த சிவாஜி..!!

நடிகர் கமல் மற்றும் சிவாஜி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் தேவர்மகன். இந்த திரைப்படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து சிவாஜி தனது நெருங்கிய வட்டாரம் மற்றும் நண்பர்களை அழைத்து விருது கொடுத்துள்ளார்.

 

அந்த வகையில் தேவர் மகன் படத்தை பார்த்து எல்லோரும் சூப்பராக இருக்கின்றது என்று பாராட்டி விட்டு சென்றுள்ளார்கள். ஆனால், கவுண்டமணி மட்டும் எதுவும் சொல்லாமல் போய்விட்டார்.

 

ஏன் கவுண்டமணி எதுவும் சொல்லவில்லை என்று சிவாஜி மனதிற்குள் ஒரு உருக்கமாக இருந்துள்ளது. அதனால், கவுண்டமணியை அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டுள்ளார். சில நாட்கள் பிறகு கவுண்டமணி சிவாஜி கணேசன் வீட்டிற்கு வந்துள்ளார்.

 

அப்பொழுது சிவாஜி கணேசன் எல்லோரும் படத்தை பார்த்து எப்படி இருக்கின்றது என்று சொல்லிவிட்டு சென்றார்கள்.. நீங்கள் எதுவும் சொல்லவில்லை என்று கவுண்டமணி இடம் கேட்டதற்கு உங்களை

 

எல்லோரும் நடிப்பின் பெரிய ஜாம்பவான் என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அந்த படத்தில் நீங்கள் ஒரு குழந்தை மிதித்து இறந்து விடுவீர்கள் என்று கலாய்த்து உள்ளார். அப்படி அவர் பேசியதை கேட்டவுடன்

 

சிவாஜிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.. அதன் பிறகு கவுண்டமணிக்கு செல்லமாக இரண்டு அடியை கொடுத்துவிட்டு சென்று விட்டு. அதன் பிறகு சிவாஜி அந்த படத்தை பலமுறை அந்த காட்சியை பார்த்து பார்த்து சிரித்ததாக கூறப்படுகிறது…

 

 

Comments are closed.