ரஜினியைப் போல விஜய் பதற மாட்டிக்கிறாங்க.? கடுமையாக தாக்கி பேசிய மீசை ராஜேந்திரன்..!!

சினிமாவில் பணிபுரியும் பல பிரபலங்கள் ஓரளவுக்கு பிரபலங்களாக திகழ்ந்து வரும் சமயத்தில் பல கருத்துக்கள் மூலம் மக்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டு வருகின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் நகைச்சுவை நடிகரும் வில்லனுமாக நடித்து வந்த

 

மீசை ராஜேந்திரன் என்பவர் வடிவேலு ஆரம்பித்து தற்போது இருக்கும் விஜய் வரை பல பிரபலங்களை பற்றி கடுமையாக விமர்சித்து தாக்கி பேசி வருகின்றார். அதன் அடிப்படையில் தற்போது மிகப்பெரிய ஒரு சர்ச்சையாக

 

சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான் என்று பேசி வருகிறார்கள். ஆனால், அது ரஜினி மட்டும் தான் என்று அவர் விமர்சித்து பேசியுள்ளார்.

 

மேலும், இது குறித்து நடிகர் விஜய் எதுவும் பேசாமல் தடுக்காமலும் இருந்து வருகின்றார். மேலும், இது அனைத்தையும் நடிகர் விஜய் ரசித்து கொண்டு வருகிறார். மேலும், ரஜினியிடம் நீங்கள் தான் அடுத்த நடிகர் திலகம் என்று ரசிகர்கள் கூறினால்

 

ரஜினி உடனடியாக பதறி அடித்து.. அது எப்பொழுதும் நான் ஆக முடியாது என்று கூறுவார். ஆனால், நடிகர் விஜய் அப்படி செய்ய மாட்டார் என்று மீசை ராஜேந்திரன் தற்போது நடிகர் விஜய் பற்றி தாக்கும் விதத்தில் பேசி வருகிறார்….

 

 

Comments are closed.