இதுக்கு மேல என்னால முடியாது.? தலை தெரிக்க கூடிய கரு.பழனியப்பன்..!! இனி யாரோ இதை பார்த்துக்கோங்க.?

இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த ஹவுஸ் ஃபுல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் கரு பழனியப்பன் என்பவர். அதனைத் தொடர்ந்து துள்ளாத மனமும் துள்ளும்,

 

பெண்ணின் மனதை தொட்டு உள்ளிட்ட படத்தில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் பார்த்திபன் கனவு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு சிவப்பதிகாரம் பிரிவோம் சந்திப்போம்

 

மந்திரப்புன்னகை சதுரங்கம் என சில திரைப்படத்தில் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நிவர்த்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி

 

மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று அதிலிருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனைக் கேட்டவுடன் ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள்.

 

அதற்கு என்ன காரணம் என்றால் எனக்கும் அந்த சேனலில் தரப்பினருக்கும் இடையே ஒரு முரண்பாடு ஏற்பட்டது. ஒன்று நான் விட்டுக் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் அவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும்.

 

ஆனால், இருவருமே விட்டுக் கொடுக்கவில்லை.. அதனால்தான் நான் விலகுகிறேன்.. இப்பொழுது தமிழா தமிழா நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் நிகழ்ச்சி நல்லபடியாக தான் போய்க் கொண்டிருக்கிறது…

 

Comments are closed.