அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது.? சீரியல் நடிகை ரேஷ்மா..!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி வம்சம் போன்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை ரேஷ்மா என்பவர். இவர் இந்த சீரியலை தாண்டி வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பாக்கியலட்சுமி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் ஒரு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

இப்படி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் ஒரு பேட்டியில் தனக்கு நடந்த ஒரு சில விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் நான் அமெரிக்காவில் கணவருடன் இருக்கும் பொழுது நான் நான்கு மாத கர்ப்பமாக இருந்தேன்.

 

அப்பொழுது அதை மறந்து விட்டு என்னை அவர் அடித்து விட்டார். அதனால் குழந்தை வெளியில் வந்துவிட்டது. அவர் பயத்தில் என்னை விட்டு ஓடி விட்டார் நான் தனியாக என்ன செய்வதென்று தெரியாமல் காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனையில் சேர்ந்தேன்..

 

மேலும், நான் தரை மாதம் குழந்தையாக மகன் பிறந்த அதன் பிறகு 9 மாதம் வரை அவனை இன்குபேட்டரில் தான் வைத்திருந்தார்கள். அங்கு எனது நிலைமையை சமாளிக்க முடியாமல் இங்கு வந்தேன் இப்பொழுது இருக்கும் மகனுக்கு முன்பாக ஒரு மகன் பிறந்து இறந்து விட்டது.

 

இவனும் போய்விடுவானோ என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. அவனை காப்பாற்ற நான் போராடினேன் என் முதல் குழந்தை எல்லோரும் மறந்து விட்டார்கள். ஆனால், என்னால் அந்த நாளை இன்று வரை மறக்க முடியவில்லை என்ற நடிகை உருக்கமாக பேசியுள்ளார்…

 

 

 

 

Comments are closed.