போனிற்கு தாலி கட்டிய மணமகன்! மணமகள் தாலியை என்ன செய்தார் தெரியுமா? ஊரடங்கில் அரங்கேறிய சுவாரசிய திருமணம்… வைரல் காட்சி

கேரளாவில் இருக்கும் மணமகனுக்கும், லக்னோவில் இருக்கும் மணப்பெண்ணுக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் திருமணம் நடந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கொ ரோனா காரணமாக நிச்சயிக்கப்பட்ட திருமணத்தினை இவ்வாறு நடத்தி அசத்தியுள்ளனர். வங்கி அதிகாரியான ஸ்ரீஜித் கேரளாவில் கோட்டயம் சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்தவர்.இவருக்கும் ஆலப்புழா பள்ளிப்பாடு பகுதியை சேர்ந்த அஞ்சனாவிருக்கும் கடந்த நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்து, ஏப்ரல் 26ம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில் லக்னோவில் இன்ஜினியராக உள்ள அஞ்சனா லாக்டவுன் காரணமாக கேரளா வர இயலவில்லை.இருப்பினும் நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணத்தை நடத்த இருவீட்டாரும் தீர்மானித்தனர். இதனால் தங்களின் திருமணத்தை வீடியோ காலின் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளனர் தம்பதிகள்.

நேற்று முன் தினம் அஞ்சனா லக்னோவில் மணப்பெண் கோலத்திலும், ஸ்ரீஜித் மணமகன் கோலத்தில் கேரளாவிலும் போன் முன் அமர்ந்து வாட்ஸ்அப் வீடியோ காலில் திருமணம் செய்து கொண்டனர்.

மணமகன் ஸ்ரீஜித் தன் கையில் இருக்கும் தாலியை போனுக்கு கட்ட, மணமகள் அஞ்சனா அவர் கையில் இருந்த தாலியை தன் கழுத்தில் கட்டிக்கொண்டார். அருகில் இருக்கும் இருவீட்டாரும் மணமக்களுக்கு அட்சதை தூவி ஆசி வழங்கினர்.

 

இந்த சுவாரஸ்யமான வீடியோவானது தற்போது முகநூல் மற்றும் ட்விட்டரில் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்து அனைவரும் ஆச்சர்ய பட்டு வருகின்றனர்.

Comments are closed.