எவ்வளவு காசு கொடுத்தாலும் அதை மட்டும் நான் செய்ய மாட்டேன்.? நிஜ வாழ்க்கையிலும் தவிர்த்துவரும் சாய்பல்லவி..!!

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் தனக்கு ரொம்ப பெரிய ஒரு அடையாளத்தை ஏராளமான நடிகைகள் ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சாய் பல்லவி என்பவரும் ஒருவர்.

 

மேலும், மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார்.

 

இவர் அதன் பிறகு சமீப காலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த, 2019 ஆம் ஆண்டு ஒரு பிரபல அழகு சாதன கிரீம் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தங்களது

 

நிறுவனத்தின் விளம்பரத்திற்காக நடிக்க வருமாறு சாய்பல்லவி இடம் அழைப்பு விடுத்துள்ளார்கள்.. ஆனால், விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவிக்கு கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் வரை சம்பளம் தருவதாக கூறினார்கள்.

 

அதற்கு நடிகை சாய் பல்லவி நீங்கள் எவ்வளவு காசு கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன் என்று மறுத்துள்ளார். மேலும், சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் மேக்கப் போடாமல் இயல்பான தோற்றத்தில் தான் இருக்க விரும்புகிறார்..

 

ஏனென்றால் அழகு சாதன பொருட்கள் மூலம் ஏராளமான விளைவுகள் ஏற்படும் அதனால் தான் நான் இதை தவிர்த்து வருகிறேன் என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.