கோடீஸ்வரராக இருந்தாலும் வேண்டாம்.? எனக்கு, இது மட்டும் தான் தேவை.? வெளிப்படையாக பேசிய நடிகை..!!

நடிகை தர்ஷா குப்தா ஆரம்பத்தில் சீரியல் நடிகையாக தான் பிரபலமானார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.

 

அதன் பிறகு சினிமாவில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் காரணமாக சீரியலில் இருந்து இவர் விலகி விட்டார். அந்த வகையில் இவர் ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

 

அதில் தனது காதல் பிரேக் பற்றியும் வெளிப்படையாக கூறியுள்ளார். அது என்னவென்றால் நான் பிரேக் அப் செய்த தனது காதலன் தற்பொழுது வரை தன்னிடம் கெஞ்சிக் கொண்டுதான் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

 

மேலும், நம்பிக்கைதான் முக்கியம்.. ஒரு முறை அது போய்விட்டால் அவ்வளவுதான்.? முதலில் நம்பிக்கை தான் தேவை நம்பிக்கை இல்லை என்றால் அவர் கோடீஸ்வரராக இருந்தால் கூட எனக்கு தேவையில்லை..

 

குடிசையில் கூட வாழ்ந்து விடுவேன். உண்மையாக எனக்கு இருந்தால் மட்டுமே போதும் என்று சமீபத்தில் கொடுத்து ஒரு பேட்டியில் நடிகை தர்சா குப்தா வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த தகவல் தான் இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

Comments are closed.