விஜய் சேதுபதி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக விஜய் மகன்.. முதல் படத்துல வாங்க போற சம்பளம் எவளோ தெரியுமா

தமிழ் சினிமாவில் மிகவும் க ஷ்டப்பட்டு தற்போது நல்ல நிலையில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. மாஸ் மசாலா படங்களுக்கு நடுவே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.அதில் மிகவும் ரசிகர்களை கவர்ந்த படம் என்றால் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இந்த படம் வெளியான பிறகுதான் விஜய்சேதுபதிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது என்று சொன்னால் மிகையாகாது.காமெடியில் அட்டகாசம் செய்திருப்பார். அதிலும் குமுதா ஹாப்பி அண்ணாச்சி, Friend-uh பில் அயிடபுல ஆப் சப்ட குல் ஆய்டுவாப்புல என்ற வசனம் செம ஹிட் அடித்து தமிழ் சினிமாவில் அனைவரையும் பேச வைத்தது.இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை எதார்த்தமாக எழுதி இயக்கியிருந்தார் கோகுல். இந்த படத்திற்கு இசையமைத்தவர் சித்தார்த் விபின். இந்த படத்தில் இவரும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

விஜய் சேதுபதி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி விஜய்யின் மகன் தான் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறாராம்.மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் விஜய்யிடம் விஜய் சேதுபதி இதைப் பற்றி பேசியதாகவும் விஜய்யும் சம்மதம் தெரிவித்ததாக அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.மேலும் இந்த படத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுக்கிறார் சஞ்சய். படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு அதைப் பற்றி பேசிக் கொள்ளலாம் என தளபதி கூறிவிட்டாராம்.

இந்நிலையில் கனடாவில் இருந்து விஜய் மகன் ஜேசன் சஞ்சய் திரும்பிய பிறகு இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிகிறது. மேலும் இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய கோகுல் எழுதி இயக்குகிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தளபதி விஜய், நடிகர்கள், மாஸ்டர், முக்கிய செய்திகள், விஜய், விஜய் சேதுபதி, விஜய் மகன் சஞ்சய்

 

Comments are closed.