30 நாட்களாக அயராத உழைத்த பெண் மருத்துவர்.. கைதட்டி பாராட்டிய மக்கள்.. ஆனந்த க ண்ணீரின் வைரல் காணொளி!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு மூன்றாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் போ லீசார் ஆகியோர் கடு மையாக உழைத்து வருகின்றனர்.அதிலும், குறிப்பாக கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை அருகில் இருந்து ஆப த்தான சூழ்நிலையில் கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஹைதராபாத்திலுள்ள மருத்துவமனையில் 30 நாட்களாக அயராது உழைத்து வீடு திரும்பிய பெண் மருத்துவர் ஒருவரை அவரது பிளாட் பகுதியில் குடியிருக்கும் அனைத்து மக்களும் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த சம்பவத்தால் நெகிழ்ந்து போன பெண் மருத்துவர் ஆனந்த க ண்ணீர் வடித்து அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார். இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Comments are closed.