தனியறையில் விக்ரம், ஜோதிகா..? சண்டை போட்ட சூர்யா..? – உண்மை என்ன..? – இணையத்தில் தீயாய் பரவும் தகவல் இதோ.

சமீபத்தில் நடிகை ஜோதிகா  தஞ்சை பெரிய கோயிலை பற்றி பேசியிருந்தார். இந்த பேச்சு பலருடைய எதிர்ப்பை சம்பாதித்தது, பல தரப்பில் இருந்தும்  குரல்கள் எழுந்தன. ஜோதிகா பேசியது நல்ல விஷயம் தான். ஆனால், தஞ்சை பெரிய கோயிலை சுட்டிக்காட்டி பேசியிருக்க கூடாது என்று கூறினார்கள். இன்னொரு தரப்பினரோ, ஜோதிகா பேசியது தவறே இல்லை என்றும் கூறுகிறார்கள்.

இதேபோன்ற ஒரு கருத்தை பல அரசியல் தலைவர்களும் கூறியுள்ளார்கள். ஆனால், அவர்கள் யாரும் குறிப்பாக இந்த கோயில் என்று குறிப்பிட்டு கூறியது கிடையாது. ஆனால், ஜோதிகா அவர்கள் வெளிப்படையாக தஞ்சை பெரிய கோயில் குறித்து
பேசிருந்தார். சரி  இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களின் தனிப்பட்ட வாழ்கையை கொச்சைப்படுத்தும் விதமாக, சிலர் மோசமான மற்றும் அவதூறான பதிவுகளை வெ ளியிட்டு வருகிறார்கள்.

அதில் ஒன்று தான், நடிகர் விக்ரம், ஜோதிகா மற்றும் சூர்யா இடையே நடந்ததாக கூறப்படும் ஒரு விஷயம். சூர்யா, ஜோதிகா நிச்சயதார்த்தம் முடிந்த பின் நடிகை ஜோதிகா விக்ரமுடன் பார்க் ஷெரட்டன் ஓட்டலில் தனியறையில் தங்கியிருந்தாதாகவும் இதனை அ றிந்த நடிகர் சூர்யா விக்ரமுடன் வார்த்தை மோதலில் ஈ டுபட்டு ஜோதிகாவை அழைத்து வந்ததாகவும் சில தகவல்களை சமூக வலைத்தளங்கள் மூலம் சிலர் பரப்பி வருகிறார்கள்.

இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதற்க்கான எந்த ஆதாரமும் இப்படியான குற்றசாட்டை வைப்பவர்கள் கொடுக்கவில்லை. உண்மையாக இருந்தால் தானே ஆதாரம் கொடுப்பதற்கு..?. ஒரு தனிப்பட்ட நபர் மீது இப்படியான போலியான தகவல்களை பரப்புவது தனி மனித தா க்குத லாக தான் பார்க்க முடியும். அடிப்படை ஆதாரம் அற்ற இது போன்ற தகவல்களை பரப்புவது மிகவும் தவறானது.

Comments are closed.