இனி என்னை சேரப்பானு கூப்படாதீங்க… கூபிட்டவர் மேல் கடுப்பான சேரன் ஏன் தெரியுமா

இயக்குனர், நடிகர் என பிரபலமான சேரன் கடந்த ஆண்டில் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.ஆனால், பிக் போட்டியாளராக நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் கதை தான் ஹைலைட்டாக இருந்தது. கவின் மற்றும் லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருந்த போது இவர்களது உ றவை பற்றி அதிகம் க வ லைப்பட்டது சேரன் தான். சேரன் அவர்கள் லாஸ்லியாவிற்கு ஒரு தந்தை போல பழகி வந்ததால், கவினுக்கு மிகவும் கோ ப த்தினை ஏற்படுத்தியது. இதனால் லாஸ்லியாவிடமிருந்து கவினை பி ரி க்க சேரனும், சேரனிடம் இருந்து லாஸ்லியாவை பி ரி க்க கவினும் பல்வேறு செயல்களை செய்து வந்தார்கள். ஆனால், சேரனின் உண்மையான பாசம் லாஸ்லியாவிற்கு தெரியாமல் போனது.

மேலும், சேரனின் மகள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போது கூட லொஸ்லியாவிடம் பேச வேண்டாம், அவளை மகள் என்று அழைக்க வேண்டாம் என்று கூறி இருந்தார். ஆனால், அப்போதும் சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கூட லொஸ்லியாவை மகளாகவே பார்த்து வந்தார். அதே போல லாஸ்லியா, எப்போதும் சேரனை, சேரப்பா சேரப்பா என்று தான் அழைத்து வந்தார். இந்த நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர், சேரனை லவ் யூ சேரப்பா என்று அழைத்திருந்தார்.

அதற்கு பதிலளித்த சேரன், தயவு செய்து என்னை சேரப்பா என்று அழைக்காதீர்கள். அது பெரிய பேரப்பா. அந்த பெயர் எனக்கு பிடிக்கவில்லை. என்னை சேரன் அல்லது சேரன் சார் என்று அழைத்தால் போகும் என்று கூறியுள்ளார் சேரன்.

Comments are closed.