பேத்தியை கையில் ஏந்தியபடி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பாட்டி ராதிகா! மகள் போட்ட அழகிய பதிவு!!

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் அன்று முதல் இன்று வரை தன்னுடைய தனித்துவமான நடிப்பால் இன்றும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நடிகை ராதிகா அவர்களும் ஒருவர் தான்.தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா சரத்குமார்.பிறகு 80,90 களிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். ரஜினி,விஜயகாந்த் என அப்போதைய முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நீடித்துள்ளார்.

நடிகை ராதிகாவின் மகள் ரேயானிற்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்ததிருந்தது. இந்த குழந்தைக்கு பாட்டியான ராதிகாவின் பெயர் போலவே ராதியா என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில் குழந்தையுடன் ராதிகா இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள ரேயான், ராதி மற்றும் ராது என்னுடைய லக்ஷ்மிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்களுடைய இரண்டு லக்ஷ்மிகளும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

View this post on Instagram

Radhi and Radhu 🧚🏻‍♀️ My Lakshmi’s ✨

A post shared by Rayane Mithun (@rayanemithun) on

Comments are closed.