ஊரடங்கில் தனது ஊரையே தெறிக்கவிட்ட நடிகர் சூரி… அப்படியென்ன செய்தார்? நீங்களே பாருங்க வைரல் ஆகும் புகைப்படம்!!

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் மிரட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கால் பல்வேறு துறையினரும் வீட்டில் முடங்கி உள்ளனர்.அந்த வகையில் பசி, தூக்கம் மறந்து வேலை செய்து வந்த பிரபநடிகர்-நடிகைகளுக்கும் கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது. இந்த ஒய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்கும் நடிகர் சூரி, நிவாரண உதவிகள் வழங்குவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என ணஊரடங்கிலும் பிசியாக இயங்கி வருகிறார். அந்தவகையில், மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காணொலி காட்சி மூலம் நகைச்சுவை நடிகர் சூரி பாடம் நடத்தி இருந்தார்

இந்நிலையில் நடிகர் சூரி தனது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருவதுடன், கொரோனா குறித்து பல விழிப்புணர்வு தகவல்களையும் கூறிவந்திருந்தார்.

பலருக்கும் உதவி செய்து வரும் சூரி, தனது காளை மாட்டுடன் ஊரடங்கில் வீதியில் நடந்து சென்றதுடன், அதனை கெத்தாக புகைப்படம் எடுத்து தனது சமூகவலைத்தளத்திலும் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.