பிரபல சீரியல் நடிகை ஸ்ரீவித்யா எப்படி இருக்கிறார் தெரியுமா.! என்ன தொழில் செய்றாங்க பாருங்க.?அட பாவமே.!

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், என்னவளே படங்களில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்குள் காகடி எடுத்து வைத்தவர் நடிகை ஸ்ரீவித்யா. சின்னத்திரையிலும் கோலங்கள், தென்றலில் நடித்து ஸ்கோர் செய்தவர். வெள்ளித்திரையை விட, இவரின் சின்னத்திரை நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.1500 எபிசோட்டுகளை கடந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த சீரியல்களில் ஒன்று கோலங்கள்.இதில் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீவித்யா ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

கோபமான காட்சிகளில் கண்களை உருட்டி உருட்டி நடித்த ஸ்ரீவித்யா, சீரியல்களில் பிஸியாக இருந்த போது தன்னுடைய உறவினரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.தொடர்ந்து குடும்பம், பிள்ளைகள் என பொழுதை கழித்தாலும் மீண்டும் சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

இருப்பினும் சொந்தமாக தொழில் செய்ய எண்ணி, சீரியலுக்கு முழுக்கு போட்டார்.
அதாவது வெளிநாடுகளில் ஃபேமஸாக இருக்கும் ‘கிளவுட் கிச்சன்’ எனும் கான்செப்டில் சொந்தமாக தொழில் தொடங்கி, அதை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்.

சென்னையில் தங்கி வேலை செய்யும் பேச்சிலர்களுக்கு நல்ல சுவையான சாப்பாடு செய்து தருகிறது இவரது நிறுவனம்.

ஹோட்டல் போல இல்லாமல், உணவு தேவைப்படுவோர் அழைப்பின் பேரில் வீட்டிலேயே செய்து தரும் முறை, தற்போது பிஸியாக இருந்தாலும் நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தாலும் நடிப்பிலும் அசத்த ரெடியாக இருக்கிறாராம்.

 

Comments are closed.