டிசம்பர் இறுதியில் கொரானாவையே மிஞ்சும் பெரிய ஆபத்து… கொரனாவை கணித்த ஜோதிட சிறுவனின் அடுத்த கணிப்பு

கொரனா என்ற பெயரை கேட்டாலே இப்போது உலக நாடுகளுக்கே உதறல் வந்து விடுகிறது. நம் இந்தியாவிலும் கொரனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டி இருக்கிறது. கொரனா நோயை ஒழிக்கும்வகையில் இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்படி அனைத்து தரப்பு மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் கொரனாவைப் பற்றி ஒருசிறுவன் முன்கூட்டியே கணித்து சொல்லியிருந்தான். அது அப்படியே நடந்ததும் இணையத்தில் வைரலானது.

அந்த சிறுவன் கர்நாடகத்தை சேர்ந்த அபிக்யா ஆனந்த். இவனது பெற்றோர் ஆனந்த் ராமசுப்பிரமணியன்_அனு ஆகியோர் ஆவர். இவனுக்கு அபிக்தியா என்ற தங்கையும் உண்டு.சிறுவயதில் இருந்தே அதிக ஆன்மீக நாட்டமுள்ள அபிக்யா அது தொடர்பில் நிறைய படிப்பாராம். கூடவே நிறைய வேதங்களையும் படிப்பார். சிறுவன் அபிக்யா அவனது ஆன்மீக, ஜோதிட புலமைக்காக பகவத் கீதா விருது, ஸ்லோகாபிரவீனா விருது, ஸ்பந்தன் ஸ்ரீ ஆகிய விருதுகளையும் பெற்று இருக்கிறார்.

கரோனா விசயத்தில் ஜோதிடச் சிறுவன் சொன்னது அப்படியே நடந்துவிட இப்போது அடுத்த ஒரு தகவலைச் சொல்லியிருக்கிறார் அதே சிறுவன். அதில், இந்த ஆண்டு டிசம்பரில் உலகுக்கே ஒரு பேரழிவுவரும். அந்த பேரழிவு மார்ச் 31ம் தேதிவரை நீடிக்கும்.கூடவே அது கொரனாவை விட கொடியதாக இருக்கும் எனவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் மட்டுமே நோயில் இருந்து நம்மைக் காக்கமுடியும். கூடவே விலங்குக்ளை கொல்வதையும் நிறுத்த வேண்டும் எனக் கூறிஉள்ளார்.

Comments are closed.