ஜோதிகா விஜய்யின் அந்த படத்தை தூக்கி எறிய சூர்யா அப்பாவும் காரணமா?.. 3 வருடங்கள் கழித்து வெளியான உண்மை

தமிழ் சினிமாவில் 90களில் இளைஞர்களின் க ன வுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஜோதிகா. சூர்யாவை திருமணம் செய்து குடும்பத்தை பார்க்கும் பொறுப்பை ஏற்று சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்து நடிகைகளுக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கிய பாலமாக அமைந்த அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் ‘மெர்சல்’. இந்தப் படம் கடந்த 2017-ம் வருடம் தீபாவளி அன்று வெளியானது. தமிழகம் முழுவதும் இல்லாமல் இந்திய அளவில் பெரும் ச ர் ச்சையை ஏற்படுத்தியது. மெர்சல் படத்தில் அழகான மனைவியாக நடித்து ரசிகர்களின் உள்ளங்கைகளை வெகுவாக கவர்ந்தவர் நடிகை நித்யமேனன். இவருக்கு பதிலாக இயக்குநர் வேறொரு முக்கிய நடிகையை பேசியுள்ளார்.

ஆனால் இந்த ரோலில் நடிக்க நடிகை ஜோதிகாவுக்கு தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் நான் இந்த ரோலில் நடிக்கமாட்டேன் என நிராகரித்து விட்டாராம். இதனால் பலரும் அவரை விமர்சித்து வந்தனர். தற்போது இதற்கான காரணத்தை நடிகை ஜோதிகா பேட்டியொன்றில் கூறியுள்ளார். அதாவது “படத்தின் ஸ்கிரிப்ட் பற்றி எனக்கும் இயக்குனருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு தான் காரணம். அதனால் படத்தில் இருந்து விலகிவிட்டேன். என் கதாபாத்திரத்தின் மீது இருந்த Creative Difference மட்டும் தான் காரணமே தவிர வேறு எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்த காரணத்தை தாண்டி வேறொரு காரணம் உள்ளதாம். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் மூன்று நாட்களுக்கு முன்பு தான் ஜோதிகா படத்தில் இருந்து விலகுவதாக கூறினாராம். திருமலை, குஷி உள்ளிட்ட படங்கள் விஜய், ஜோதிகாவின் கேரியரை மாற்றியப்படங்களாக இருந்தது.

அப்படத்தில் விஜய் ஜோதிகாவுடன் நெருக்கமான அதுவும் குஷியில் க்ளைமேக்ஸ் காட்சியில் முத்தமிடுவது போன்ற காட்சிகள் அமைந்திருக்கும். இக்காட்சியை பார்த்த சூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு மனசங்கடத்தை கொடுத்ததாகவும், மேலும் மீண்டும் படங்களில் விஜய்யுடன் நடித்தால் அந்த காட்சிகள் ரசிகர்கள் மீண்டும் பகிர்ந்து வருவார்கள் என்று நினைத்துதான் இதற்கு சம்பதிக்கவில்லையாம் ஜோதிகா.

Comments are closed.