சிம்புவுக்கு ஜோடியாகிறாரா பாலிவுட் நடிகை.. அப்போ கண்டிப்பா இது மாதிரி தான் படம் இருக்கும்.? சந்தோஷத்தில் ரசிகர்கள்..!!

நடிகர் சிம்பு தற்போது பத்து தலை திரைப்படத்தை தொடர்ந்து அவரது 48வது திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். மேலும், அந்த திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், அந்த திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கப் போவதாக கூறியுள்ளார்கள். மேலும், பிரம்மாண்டமாக உருவாக இந்த படத்தின் படபிடிப்பு கூடிய விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.

 

இப்படி ஒரு நிலையில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் சூப்பர் நடிகை தீபிகா படுகோனே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், சிம்புவின் கடைசியாக வெளிவந்த மாநாடு, வெந்து தணிந்தது காடு

 

பத்து தலை போன்ற திரைப்படங்கள் மிரட்டல் திரைப்படமாக அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இவரது 48வது திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த திரைப்படத்தில் முதலில் ரஜினி நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு தற்போது சிம்பு வந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் மிகவும் மிரட்டலாக நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து இந்த படத்திலும் இவர் நடித்த படம் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.