அடுத்தது திரையுலக பிரபலங்கள் மரணம்.? ரஜினியின் நண்பன் இறந்ததாக வந்த தகவல்..!!

நேற்று தமிழ் திரை உலகில் பெரிய ஒரு அதிர்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது. அது என்னவென்றால் பிரபல இயக்குனரும் நடிகருமான மனோபாலா என்பவர் உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

 

இதனால் திரைப்படங்கள் கடும் சோகத்தில் இருந்து வருகின்றார்கள். இதனால் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றார்கள். இப்படி ஒரு நிலையில் நேற்று இரவு ரஜினியின் நண்பரும்

 

நடிகருமான சரத் பாபு என்பவர் இறந்து விட்டதாக ஒரு சில தகவல்கள் வெளிவந்தது. அதனால் இவருடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று பலரும் தெரிவித்து வந்துள்ளார்கள். ஆனால், உண்மையில்

 

சரத் பாபு உயிருடன் தான் இருந்து வருகின்றார். யாரோ ஒருவர் வதந்தியாக பரப்பி இருந்த தகவல் தற்பொழுது அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருந்து வருகின்றார்கள். அவர் கடந்த, சில வாரங்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு

 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும், அவருடைய உடல் உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்து வருவதாக மருத்துவர் தெரிவித்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள். மேலும், கூடிய விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று

 

அவரது ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றார்கள். இப்படி ஒரு நிலையில் இவர் இறந்து விட்டதாக புரளி தற்பொழுது உலா வருகின்றது. ஆனால், அவர் தற்பொழுது உயிரோட இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

Comments are closed.