ரஜினியுடன் நடிக்க மறுத்த நடிகை..!! நேரடியாக சென்று என்ன காரணம் என்று கேட்ட ரஜினி..!!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அபூர்வராகங்கள். இந்த திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற

 

பலமொழி திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அண்ணாத்த. இந்த திரைப்படம் நினைத்த அளவு வெற்றி படமாக அமையவில்லை.

 

அந்த படத்தை தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்திற்கு அடுத்தபடியாக லோகேஷ் இலக்கியத்தில் தன்னுடைய கடைசி திரைப்படத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

 

இப்படி ஒரு நிலையில் இவருடன் ஒரு திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் ஆவது நடித்து விட வேண்டும் என்று ஏராளமான நடிகைகள் மற்றும் நடிகர்கள் ஏங்கி வருகின்றார்கள். இப்படி நிலையில் ரஜினி படத்தில் ஒரு நடிகை நடிக்க மறுத்துள்ளார்.

 

அந்த நடிகை வேறு யாரும் கிடையாது நடிகை ஜெயஸ்ரீ என்பவர் தான். மேலும், நீதானே என்னிடம் நடிக்க மாட்டேன் என்று கூறினாய் என்று கேட்டுள்ளார். அதற்கு நடிகை ஜெயஸ்ரீ நான் அப்படி சொல்லவில்லை.. நீங்கள் சொன்ன நேரத்தில் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டது.

 

அதன் அடிப்படையில் தான் நான் அப்பொழுது நடிக்க மறுத்துள்ளேன் என்று ரஜினியிடம் கூறியுள்ளார். அதற்கு நடிகர் ரஜினியும் சிரித்தபடி சரி நானும் விளையாட்டாக தான் கேட்டேன் என்று கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது…

 

Comments are closed.