சூர்யா நடித்த இந்த படம் நான் நடிக்க வேண்டியது.? அடடே, விஜயகாந்த்காக எழுதிய கதையா இது.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. மேலும், இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில்

 

வெளிவந்த திரைப்படம் தான் ஆதவன். இந்தத் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த அவரைத் தொடர்ந்து பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படம்

 

நல்ல ஒரு வெற்றியை கொடுத்தது. மேலும், இந்த படத்திற்கான கதையை நடிகர் ரமேஷ் கண்ணா தான் எழுதினார். இந்த படம் பற்றிய சில தகவல்களை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கொடுத்துள்ளார். அது என்னவென்றால்

 

இந்த கதையை அவர் விஜயகாந்த் காகத்தான் முதலில் எழுதியுள்ளார். ஆனால், அதற்கு பிறகு சூர்யா மற்றும் ரெட் ஜெயின்ட் கூட்டணி சேரும் படத்திற்காக கேஎஸ் ரவிக்குமார் கதை தேடிக் கொண்டிருந்தாராம்.

 

அந்த நேரத்தில் தான் இந்த கதையை அவரிடம் கூறியுள்ளார். அவருக்கும் பிடித்து விட்டது அதன் பிறகு சூர்யாவை நடிக்க வைத்துள்ளார்கள் என்று தற்போது தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.